Monday, June 11, 2012
nanri kaditham
அன்பிற்கினிய லண்டன் மாநகர் வாழ் செக்கடி பள்ளி முஹல்லாஹ் சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் அதிரை பைதுல்மால் தலைமை நிலைய நிர்வாகிகள் சார்பில் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தங்கள் எல்லோரது சார்பில், அனைத்து முஹல்லாஹ் பேரவையின் செயலர் பேரா. ஹாஜி ஜநாப் M.A. அப்துல் காதர் அவர்கள் மூலம் ரூ. 10,000/- ஏழை எளிய மாணவ மாணவிகளின் பள்ளி சீருடைக்காக, நன்கொடையாக வழங்கி உதவியுள்ளீர்கள். புதிய கல்வி ஆண்டு தொடங்கும் இத்தருவாயில் ஏழை எளிய மாணவ மாணவிகளின் அடிப்படை தேவைக்காக ஒரு உதவி யை செய்துள்ளீர்கள். தங்களை போன்றவர்கள் செய்கின்ற இதுபோன்ற உதவி களைக்கொண்டு தான் அதிரை பைதுல்மால் மக்கள் நல சேவையை தொடர்ந்து செய்ய முடிகிறது. தாங்கள் தொடர்ந்து தொடர்பு கொள்வதுடன் தாங்கள் விரும்பும் வகையில் தங்கள் விரும்பும் தொகைகளை நன்கொடையாக வழங்கி ஊக்கம் அளிக்க வேண்டுகிறோம். தாங்கள் வழங்கிய உதவிக்குப் பன்மடங்கு நன்மையை வல்ல அல்லாஹ் இம்மை மறுமையில் வழங்கிப் பேரருள் புரிவானாக, ஆமின் யாரப்பல் ஆலமீன் என நெஞ்சார துஆ செய்கின்றோம்.
குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 98 பேருக்கு விதவை பெண்கள் வயதானவர்கள் வருமானம் இல்லாதவர்கள்.ரூ. 300 /- வீதம் பென்சன் வழங்கப்படுகிறது. இதற்கு ஜகாத், சதகா , நன்கொடைகளை பயன்படுத்த படுகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்கும் உதவி செய்யலாம்.
சுன்னத் திட்டம்: ஏழை எளியபிள்ளைகளுக்கு சுன்னத் செய்ய படுகின்றது. இதற்கு ஸ்பான்சர் உதவி பெறப்படுகிறது.
வஸ்ஸலாம்
Subscribe to:
Posts (Atom)